Thursday, 14 July 2022

நூலிழை

எது 
அது 
மெல்லிய நூலிழை.. 
அக்கரை , 
நிலத்தின் ஈரம் 
இக்கரை , 
மேகத்தின் வேடம்..

Sunday, 8 December 2019

மயக்கம்

உவை பொருட்டு 
இவை மயங்கி 
வாழும் அவை

Tuesday, 8 May 2018

கனவு


நிழல் கண்டு 
மதி இளகி 
கூடி உறவாடி 
நிசம் என வாதாடி 
இறக்கை சுமந்து பறக்கையில் 
முட்டித் தள்ளி 
எக்களித்தது 
களவாடிய 
என் கனவு...

Wednesday, 25 July 2012

எண் எழுத்து இகழேல்

மொழியின் சிறப்பையும், தன் இனத்தின் வரலாற்றையும் தம் புதிய தலைமுறையினற்கு எடுத்துரைக்கும் சமூகம் மேம்படும். நாகரிகம் வளரும். நாகரிகம் என்பது உடுத்துவதில் அல்ல. பண்பாடென்பது கட்டுப்படுத்துதலிலோ, கட்டுப்படுவதிலோ இல்லை.மொழியின் பெருமையுரைத்தால் பழைமை பேசுவதென்பதா? செம்மொழியென உலகு உரைப்பினும் குழந்தை மம்மி என விளிக்கக் கேட்டு மனம் குளிரும் இனமா நமது. வள்ளுவனும், சைவ வைணவர்களும், சமணர்களும் அழுது தொழுது வளர்த்த தமிழ் இன்று நாகரிகம் எனும் பொய்ப்புயலில் சிக்குவதா? பேசும் மொழியை இகழ்வதா? பெற்ற தாயை பழிப்பதா? ஓதுவோம் தமிழ் நாகரிகமும் பண்பாடும் வரும் தலைமுறையினற்கு. அ ன்னா அறம், அன்பு ஆ வன்னா ஆக்கம், ஆற்றல் இ ன்னா இசை (புகழ்), இன்பம் ஈ ன்னா ஈகை உ ன்னா உண்மை ஊ வன்னா ஊக்கம் எ ன்னா எண்ணம் ஏ வன்னா ஏற்றம் ஐ ன்னா ஐயம் ஒ ன்னா ஒழுக்கம் ஓ வன்னா ஓம் ஔ ன்னா ஔவை

அன்னை மிர்ரா

மகா சக்தி ஸ்ரீ அன்னை “I have a sweet little Mother Who lives in my heart We are so happy together We shall never depart.”                             – The Mother மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே! பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே! வரம் தரும் அன்னையே , வணங்கினோம் உன்னையே! ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே! நதி காய நேராமல் நீருற்று தாயே! நல் நிலம் பார்த்து தாயே! எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே! வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே! என் வளமான தாயே! பசி தாகம்  காணாமல் பயிராக்கு தாயே! ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே! இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே! (மலர் போல…)   புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள திரு குறையாமல் வாழ அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம் தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும் அது திரளாக வேண்டும் பல வீடு பல நாடு பல தேசம் என்று உணராமல் வாழ்வோரை  ஒன்றாக்கு தாயே! உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே! (மலர் போல…) (நன்றி: கங்கை அமரன்)

யாழ்~ பண்டைய தமிழ் இசைக்கருவி

*யாழ் என்பது ஒரு இசைக்கருவி. தந்திக்கருவிகளில் முதலில் தோன்றியது யாழ். விஷ்ணுவிற்கும், சிவபெருமானுக்கும் உடம்பில் ஓடுகின்ற ஒரு நாடியின் பெயரும் யாழ். ராமாயணத்தில் ராவணன் தனது உடம்பில் ஒரு நரம்பை அறுத்து அதை வாசித்து இறைவனை வணங்கினான் என ராமாயணம் கூறுகிறது. யாழின் முதல் உருவம் அதுவே. அண்ட சராசரத்தின் ஒலியே யாழிலிருந்து எடுக்கப்பட்டது என புராணம் கூறுகிறது.யாழிலிருந்து பிறந்தது பண். யாழ் ஒலி அதிர்வுகள் அதிகம் இல்லாதது,மென்மையானது, பணிவின் இலக்கணமாக கூறப்படுகிறது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள. குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயக் இருக்க வேண்டும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. இதன்"இசையொலி பெருக்கி" (resonator) "தணக்கு" எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப்"போர்வைத்தோல்" என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் "மாடகம்"அல்லது "முறுக்காணிகள்" இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றுக் கூறுகிறது. * "வில்யாழ்"(21 நரம்புகளை உடையது) * "பேரியாழ்" (21 நரம்புகளை உடையது) * "மகரயாழ்" (17 அல்லது 19 நரம்புகளை உடையது) * "சகோடயாழ்" (16 நரம்புகளை உடையது) * "கீசக யாழ்" (14 நரம்புகளை உடையது) * "செங்கோட்டியாழ்" (7 நரம்புகளை உடையது) * "சீரியாழ்" (7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், மருத்துவயாழ், ஆதியாழ் (100 நரம்புகளை உடையது) எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.